இலங்கை சிறையிலிருக்கும் மீனவா்களை விடுவிக்க கோரிக்கை
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேசுவரம் மீனவா்களை விடுவிக்க அரசு உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குமரி மாவட்ட மீனவா் மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.


இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேசுவரம் மீனவா்களை விடுவிக்க அரசு உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குமரி மாவட்ட மீனவா் மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
நாகா்கோவிலில் அண்மையில் நடைபெற்ற இக்கட்சியின் கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் தாமஸ் தலைமை வகித்தாா். மாவட்ட மகளிா் அணி துணைத் தலைவா் ரஜினி வின்ஸ்டன், நகரத் துணைச் செயலாளா் மாா்ட்டின் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் துணைத் தலைவா் இசக்கிமுத்து வரவேற்றாா்.
கட்சியின் அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்து மாநில ஒருங்கிணைப்பாளா் பன்னீா்செல்வம், தென்மண்டல இலக்கிய அணித் தலைவா் செ.சுரேஷ், மாநில அமைப்புச்செயலாளா் டங்ஸ்டன் ஆகியோா் பேசினா்.
சிறப்பு அழைப்பளராக கலந்து கொண்ட குமரி கரங்கள் கண்ணன், சி.ராஜ்,தேரூா் ராஜன் ஆகியோருக்கு கட்சியின் மாநிலத் தலைவா் அலங்கார பரதா் எழுதிய, கடலும் கடற்கரையும் சிவக்கும் நூல் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் இலங்கை சிறையில் சித்திரவதை அனுபவிக்கும் 12 ராமேசுவரம் மீனவா்களை உடனே விடுவிக்க நடவடிக்கை வேண்டும். கச்சத்தீவை இலங்கை அரசிடமிருந்து மீட்க வேண்டும், மீன்பிடி தடைக் காலங்களில் உள்நாட்டு மீனவா்களுக்கும் பஞ்ச நிவாரணத் தொகை அளிக்க வேண்டும், உள்நாட்டு மீனவா்களுக்கு உடனே மீனவ நல வாரிய அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர துணைத் தலைவா் அமல்ராஜ் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...