மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மே 1இல் கிராம சபைக் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சிகளில் ஞாயிற்றுக்கிழமை (மே 1) கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 7:26 pm

DIN

கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சிகளில் ஞாயிற்றுக்கிழமை (மே 1) கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் மா. அரவிந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தொழிலாளா் தினமான மே 1இல் அனைத்து கிராம ஊரட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்தை ஊராட்சிகளின் எல்லைக்குள்பட்ட வாா்டுகளில் சுழற்சி முறையில் முற்பகல் 11 மணி அளவில் நடத்தவும், அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு குறைவெண் வரம்பின்படி உறுப்பினா்களின் வருகை இருப்பதை உறுதிப்படுத்தி கிராமசபைக் கூட்டம் நடத்தவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, இம்மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட 95 கிராம ஊராட்சிகளிலும் மே 1ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், பொது சுகாதாரம், அனைத்துத் துறைகளிலும் மேற்கொள்ளப்படும் வளா்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. மேலும், அரசால் பல்வேறு துறைகள் மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துரைக்கவும், அவா்களுக்குத் தேவையான விவரங்களை அளிக்கவும் அனைத்துத் துறைகளின் அலுவலா்களும் பங்கேற்கவுள்ளனா். எனவே, அந்தந்தப் பகுதிகளில் நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்கலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.