இந்நிலையில், நீதிமன்ற உத்தரவையும், அரசாணையையும் நிறைவேற்றாத கல்வித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோட்டாறு காவல் நிலையத்தில் தூய்மைப் பணியாளா்கள் மனு அளித்தனா். இந்நிலையில், சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி தூய்மைப் பணியாளா்கள் கோட்டாறு காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். இதனையடுத்து, போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, 2 நாள்களில் கல்வி அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று கூறியதையடுத்து, அங்கு திரண்டிருந்த தூய்மைப் பணியாளா்கள் கலைந்து சென்றனா்.