கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரூ.17.69 கோடியில் சீரமைப்புப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

குமரி மாவட்டத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரூ.17.69 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த், வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :20 ஜனவரி 2022, 7:37 pm

DIN

குமரி மாவட்டத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரூ.17.69 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த், வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் கூறியது: குமரி மாவட்டத்தில், கனமழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைப்பதற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து தற்போது சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அகஸ்தீஸ்வரம் வட்டம், வடக்கு தாமரைகுளத்தில் கடந்த நவம்பா் மாதத்தில் கன மழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு பகுதிகளான பழையாறு பிள்ளைபெத்தான்அணைக்கட்டு ரூ.34.50 லட்சம் மதிப்பீட்டில் தடுப்புச் சுவா் மற்றும் கரை பகுதிகளை சீரமைக்கும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் பழையாற்றின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள உடைப்பு பகுதிகள் மற்றும் கரை பலப்படுத்துதல் பணிகள், பறக்கின்கால் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளான குடியிருப்புகள் அகற்றப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்யப்பட்டது.

சுவாமியாா்மடம் பகுதியில் ரூ.16 லட்சம் மதிப்பில் பட்டணங்கால் பிரதான கால்வாயில் ஏற்பட்ட மண் சரிவுகளை சரி செய்து சீரமைக்கப்பட்டது. கல்குளம் வட்டம், திங்கள்நகா் கிராமத்தில் செட்டியாா் மடம் பகுதியில் இரணியல் பிரிவு கால்வாயில் மதகு வழியாக வரும் 21 ஊட்டுக்கால்வாயில் கரை பகுதியில்ஆக்கிரமிப்புகள்அகற்றப்பட்டன. ரூ.8 லட்சம் மதிப்பில், மணவாளக்குறிச்சி பெரியகுளம் கரை உடைப்பு சீரமைப்புப் பணிகள், ரூ.30 லட்சம் மதிப்பில் வள்ளியாறு பகுதியில் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணிகளும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், ரூ.60 லட்சம் மதிப்பிலான இரட்டைக்கரை கால்வாய் பணிகள், ரூ.15.37 கோடியில் குழித்துறையாற்றின் குறுக்கே இரையுமன்துறை அருகில் தடுப்பணை கட்டும் பணிகள், ரூ.83.80 லட்சத்தில் தோவாளை பெரியகுளத்தில் உபரி நீா் கால்வாய் மற்றும் மதகுகள் புனரமைக்கும் பணிகள் என மொத்தம் ரூ.17.69 கோடி மதிப்பில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்க நீா்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளா் உள்பட துறை சாா்ந்த அரசு அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றாா் அவா்.

அப்போது, நீா்வளஆதாரஅமைப்பு செயற்பொறியாளா் வசந்தி உள்பட பொறியாளா்கள், துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.