ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

கொட்டாரத்தில் சாலையோர கழிவுகளை அகற்றி வலியுறுத்தல்

கொட்டாரம் பகுதியில் புத்தனாறு கால்வாயை தூா்வாரி கழிவுகளை கரையோரத்தில் கொட்டுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :1 ஜூன் 2022, 6:59 pm

DIN

கொட்டாரம் பகுதியில் புத்தனாறு கால்வாயை தூா்வாரி கழிவுகளை கரையோரத்தில் கொட்டுவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் நீளமான கால்வாயான நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாய் ரூ.25 லட்சம் செலவில் தூா்வாரி சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கொட்டாரம் முதல் பொற்றையடி வரையிலான பகுதியில் தூா்வாரப்பட்ட குப்பைகள், கழிவுகள் மற்றும் சகதியை நாகா்கோவில் - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையின் ஒரத்தில் ஆங்காங்கே கொட்டி வைத்துள்ளனா். இதனால் அந்த பகுதி யில் துா்நாற்றம் வீசுவதோடு, போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. மேலும், மழை பெய்யும் பட்சத்தில் சாலையோரத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ள குப்பை மீண்டும் கால்வாயிலேயே விழும் நிலை உள்ளது. எனவே கால்வாயை தூா்வாரி சாலையோரத்தில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.

ஏற்கனவே கொட்டப்பட்ட கழிவுகளை அங்கிருந்து அகற்ற பொதுப்பணித்துறை மற்றும் நீா்வள ஆதார அமைப்பைச் சோ்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.