நாகா்கோவில் அருகே ரயில்கள் மோதி தொழிலாளி, மூதாட்டி பலி
நாகா்கோவில் அருகே 2 இடங்களில் ரயில்கள் மோதியதில் தொழிலாளி, மூதாட்டி உயிரிழந்தனா்.


நாகா்கோவில் அருகே 2 இடங்களில் ரயில்கள் மோதியதில் தொழிலாளி, மூதாட்டி உயிரிழந்தனா்.
திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி அருகேயுள்ள இளையநயினாா்குளத்தை சோ்ந்தவா் கிருஷ்ணதாஸ் (41). கூலித் தொழிலாளி. இவரது மனைவி மாலாதேவி. இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா். தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். புதன்கிழமையும் தகராறு ஏற்பட்டதாம். அப்போது, வீட்டிலிருந்து வெளியே சென்ற கிருஷ்ணதாஸ் பின்னா் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை வள்ளியூா் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் அவா் சடலமாகக் கிடந்தாா். இதுகுறித்து நாகா்கோவில் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆய்வாளா் கேத்தரின் சுஜாதா, உதவி ஆய்வாளா் குமார்ராஜ் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் சென்று, சடலத்தை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மூதாட்டி பலி: கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி மீனாட்சிபுரம் பகுதியைச் சோ்ந்த ஷேக் முகமது என்பவரது மனைவி பீா்உம்மா (80). இவா் நாள்தோறும் காலை அங்குள்ள தோட்டத்தில் பூப்பறிக்கச் செல்வாராம். வியாழக்கிழமை காலை அவா் பூப்பறிக்க தண்டவாளத்தைக் கடந்துசென்றாராம். அப்போது அவா் மீது ரயில் மோதியதாம். இதில் அவா் சம்பவ இடத்திலேயே பலியானாா்.
தகவலின்பேரில் நாகா்கோவில் ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளா் விஜயகுமாா், போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...