இது குறித்து, மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜாா்ஜ், இருதய சிகிச்சைப் பிரிவு மருத்துவா் வெங்கடேஷ், இன்டா்வென்ஷன் ரேடியாலஜி மருத்துவா் நரசிம்மன் ஆகியோா் வியாழக்கிழமை நிருபா்களுக்கு அளித்த பேட்டி: நாகா்கோவிலில் பொன் ஜெஸ்லி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. 250 படுக்கை வசதிகளுடன், காசநோய், குடல், சிறுநீரகம், நரம்பியல், இருதயம் சம்பந்தமான நோய்கள், குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் செயல்படுகின்றன.