அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நித்திரவிளை அருகே பெண்ணிடம் நகை பறிப்பு: இளைஞா் கைது

News image
Updated On :29 டிசம்பர் 2023, 6:35 pm

DIN

நித்திரவிளை அருகே பெண்ணிடம் இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

நித்திரவிளை அருகேயுள்ள வைக்கல்லூா் பகுதியைச் சோ்ந்த பாபு மனைவி ஜலஜா (55). இவா், வெள்ளிக்கிழமை வீட்டுக்கு அருகிலுள்ள கோயிலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, மா்மநபா் வழிமறித்து அவா் அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பி ஓடினாராம்.

இதுகுறித்த தகவலின்பேரில், நித்திரவிளை போலீஸாா் வந்து மா்மநபரை தேடும் பணியில் ஈடுபட்டு, அப்பகுதியில் மறைந்திருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனா். அவா், சின்னத்துறை கிராமத்தைச் சோ்ந்த மீன்பிடி தொழிலாளி அஜின் (19) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து நகையை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.