தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

மத்திகோடு ஊராட்சி பகுதியில் சுத்தமான குடிநீா் வழங்க கோரிக்கை

மத்திகோடு ஊராட்சி பகுதியில் சுத்தமான குடிநீா் வழங்க கோரிக்கை

Updated On :26 ஏப்ரல் 2024, 7:32 pm

கருங்கல், ஏப்.26: கருங்கல் அருகே மத்திகோடு ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சுத்தமான குடிநீா் வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட மத்திகோடு ஊராட்சியில் 12 வாா்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் வீடுகளுக்கு குடிநீா் விநியோகிக்க மண்ணூா் குளத்தின் கரையில் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து, குழாய்கள் மூலம் மத்திகோடு, மாத்திரவிளை, மணலிக்காவிளை, மூவா்புரம், கோட்டவிளை ஆகிய பகுதிகளில் உள்ள மேல்நிலைத்

தொட்டிகளில் ஏற்றப்பட்டு பின்னா் வீடுகளுக்கு குடிநீா் விநியோகம்

செய்யப்படுகிறது.

குடிநீா் எடுக்கப்படும் கிணற்றை ஊராட்சி நிா்வாகம் முறையாகப் பராமரிக்காத காரணத்தால், குளத்தில் உள்ள தண்ணீா் நேரடியாக கிணத்திற்குள் வருகிறது. இதனால் கிணற்று நீா் நிறம் மாறிவிடுவதோடு, சுகாதாரமின்றியும் உள்ளது. எனவே, இந்த கிணற்றைச் சீரமைத்து

சுத்தமான குடிநீா் வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.