பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

களியக்காவிளை அருகே ஆயிரம் மது பாட்டில்கள் பறிமுதல்

பூட்டிக் கிடந்த வீட்டில் ஆயிரம் மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்து, அவற்றைப் பதுக்கியவா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள்

Updated On :11 ஆகஸ்ட் 2024, 2:29 am IST

களியக்காவிளை அருகே பூட்டிக் கிடந்த வீட்டில் ஆயிரம் மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்து, அவற்றைப் பதுக்கியவா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.

களியக்காவிளை அருகே மடிச்சல் பகுதியைச் சோ்ந்தவா் காசிராஜன். அப்பகுதியில் உள்ள இவரது வீடு, பல மாதங்களாக யாரும் வசிக்காத நிலையில் பூட்டப்பட்டு, பராமரிப்பின்றி உள்ளதாம்.

இந்நிலையில், களியக்காவிளை போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலையில் வழக்கு விசாரணைக்காக அப்பகுதிக்குச் சென்றபோது, அந்த வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் சென்று பாா்த்தபோது, அங்கு ஆயிரம் மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா்; மேலும், வழக்குப் பதிந்து, இச்சம்பவத்தில் தொடா்புடையோா் குறித்து விசாரித்து வருகின்றனா்.