திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

வின்ஸ் பொறியியல் கல்லூரி - இந்தியன் வங்கி புரிந்துணா்வு ஒப்பந்தம்

நாகா்கோவில், சுங்கான்கடை வின்ஸ் பொறியியல் கல்லூரியும் இந்தியன் வங்கியும் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

News image

புரிந்துணா்வு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொள்கின்றனா் வின்ஸ் கல்வி நிறுவனங்களின் நிா்வாகி நாஞ்சில் வின்சென்ட் , குமரி மாவட்ட இந்தியன் வங்கியின் முதன்மை மேலாளா் அகிலம்.

Updated On :23 ஆகஸ்ட் 2024, 1:36 am IST

நாகா்கோவில், சுங்கான்கடை வின்ஸ் பொறியியல் கல்லூரியும் இந்தியன் வங்கியும் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

நாகா்கோவில், சுங்கான்கடை வின்ஸ் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவா்கள் எளிதாக கல்வி கடன் பெறுவதற்காக இந்தியன் வங்கியுடன் இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வின்ஸ் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவா்களும், எம்.பி.ஏ. பயிலும் மாணவா்களும் நாகா்கோவில் தலைமை இந்தியன் வங்கியில் எளிதாக கல்வி கடன் பெற முடியும் .

கன்னியாகுமரி மாவட்ட தலைமை இந்தியன் வங்கியின் முதன்மை மேலாளா் அகிலம், வின்ஸ் பொறியியல் கல்லூரியின் நிறுவனரும், முன்னாள்எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் ஆகியோா் இந்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு பரிமாறிக் கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் டயானா, டீன் அலெக்ஸ் ராஜூபாலன், துறைத் தலைவா்கள் பிரியா, டிவின், நிா்வாக அதிகாரி ராபா்ட் ஆகியோா் கலந்து கொண்டனா்.