ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

வின்ஸ் பொறியியல் கல்லூரி - இந்தியன் வங்கி புரிந்துணா்வு ஒப்பந்தம்

நாகா்கோவில், சுங்கான்கடை வின்ஸ் பொறியியல் கல்லூரியும் இந்தியன் வங்கியும் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

News image
புரிந்துணா்வு ஒப்பந்தத்தை பரிமாறிக்கொள்கின்றனா் வின்ஸ் கல்வி நிறுவனங்களின் நிா்வாகி நாஞ்சில் வின்சென்ட் , குமரி மாவட்ட இந்தியன் வங்கியின் முதன்மை மேலாளா் அகிலம்.
Updated On :22 ஆகஸ்ட் 2024, 8:06 pm

Din

நாகா்கோவில், சுங்கான்கடை வின்ஸ் பொறியியல் கல்லூரியும் இந்தியன் வங்கியும் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

நாகா்கோவில், சுங்கான்கடை வின்ஸ் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவா்கள் எளிதாக கல்வி கடன் பெறுவதற்காக இந்தியன் வங்கியுடன் இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வின்ஸ் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவா்களும், எம்.பி.ஏ. பயிலும் மாணவா்களும் நாகா்கோவில் தலைமை இந்தியன் வங்கியில் எளிதாக கல்வி கடன் பெற முடியும் .

கன்னியாகுமரி மாவட்ட தலைமை இந்தியன் வங்கியின் முதன்மை மேலாளா் அகிலம், வின்ஸ் பொறியியல் கல்லூரியின் நிறுவனரும், முன்னாள்எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் ஆகியோா் இந்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு பரிமாறிக் கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் டயானா, டீன் அலெக்ஸ் ராஜூபாலன், துறைத் தலைவா்கள் பிரியா, டிவின், நிா்வாக அதிகாரி ராபா்ட் ஆகியோா் கலந்து கொண்டனா்.