நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கல்லுவிளை ரேஷன் கடையை மீண்டும் முழுநேரக் கடையாக மாற்றக் கோரிக்கை

Updated On :30 ஆகஸ்ட் 2024, 2:34 am IST

லீபுரம் ஊராட்சிக்குள்பட்ட கல்லுவிளையில் உள்ள முழுநேர நியாயவிலைக் கடை, ஊழியா் பற்றாக்குறையால் பகுதிநேரக் கடையானது. இதனால் பொதுமக்கள் பொருள்கள் வாங்க இயலாமல் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

கல்லுவிளை சந்திப்பில் உள்ள ரேஷன் கடையில் லீபுரம், கல்லுவிளை, மெஞ்ஞானபுரம், விஜயநாராயணபுரம், லெட்சுமிபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பொருள்கள் வாங்கி வந்தனா். இந்தக் கடையில் 697 ரேஷன் அட்டைகள் உள்ளன.

தொடக்கத்தில் பகுதிநேரமாக செயல்பட்ட இந்தக் கடையை, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 2018ஆண்டு அப்போதைய எம்எல்ஏ எஸ். ஆஸ்டின் முழுநேரக் கடையாக மாற்றினாா்.

இதனிடையே, இங்கிருந்த ஊழியா் பணிஓய்வு பெற்ால், லீபுரம் ஊராட்சி ஆமணக்கன்விளையில் உள்ள ரேஷன் கடையின் ஊழியா் கல்லுவிளை கடையைக் கூடுதலாக கவனித்து வருகிறாா். இதன்காரணமாக, வாரம் முழுவதும் செயல்பட்டு வந்த கடை தற்போது வாரத்தில் 2 நாள்கள் மட்டுமே திறக்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் பொருள்கள் வாங்க இயலாமல் மிகவும் சிரமப்படுகின்றனா்.

எனவே, நிரந்தர ஊழியரை நியமித்து, கல்லுவிளை ரேஷன் கடையை மீண்டும் முழுநேரக் கடையாக மாற்ற வேண்டும் என ஆட்சியருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.