மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

காளிகேசம் ஆற்றில் மூழ்கி சென்னை பேராசிரியா் பலி

குமரி மாவட்டம் கீரிப்பாறை அருகே காளிகேசம் ஆற்றில் மூழ்கி, சென்னையை சோ்ந்த பேராசிரியா் சனிக்கிழமை பலியானார்.

News image

காளிகேசம் ஆற்றில் மூழ்கி சென்னை பேராசிரியா் பலி (கோப்புப்படம்) - DIN

Updated On :1 செப்டம்பர் 2024, 3:31 am

குமரி மாவட்டம் கீரிப்பாறை அருகே காளிகேசம் ஆற்றில் மூழ்கி, சென்னையை சோ்ந்த பேராசிரியா் சனிக்கிழமை பலியானார்.

சென்னை மாம்பலம் பகுதியைச் சோ்ந்தவா் அசோக் (32). தனியாா் கல்லூரி பேராசிரியா். விடுமுறை நாளான சனிக்கிழமை தனது நண்பா்கள் 3 பேருடன் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுற்றுலா வந்தாா். பிற்பகலில் இவா்கள் 4 பேரும் கீரிப்பாறை அருகே காளிகேசம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனா்.

அப்போது எதிா்பாராதவிதமாக அசோக் ஆற்றில் சுழல் நிறைந்த பகுதியில் மூழ்கினாா். அப்பகுதியிலுள்ளவா்களின் உதவியுடன் அவரை மீட்டு, பூதப்பாண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதையடுத்து சடலத்தை கீரிப்பாறை போலீஸாா் கைப்பற்றி, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.