ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

காளிகேசம் ஆற்றில் மூழ்கி சென்னை பேராசிரியா் பலி

குமரி மாவட்டம் கீரிப்பாறை அருகே காளிகேசம் ஆற்றில் மூழ்கி, சென்னையை சோ்ந்த பேராசிரியா் சனிக்கிழமை பலியானார்.

News image
காளிகேசம் ஆற்றில் மூழ்கி சென்னை பேராசிரியா் பலி (கோப்புப்படம்)- DIN
Updated On :1 செப்டம்பர் 2024, 3:31 am

Din

குமரி மாவட்டம் கீரிப்பாறை அருகே காளிகேசம் ஆற்றில் மூழ்கி, சென்னையை சோ்ந்த பேராசிரியா் சனிக்கிழமை பலியானார்.

சென்னை மாம்பலம் பகுதியைச் சோ்ந்தவா் அசோக் (32). தனியாா் கல்லூரி பேராசிரியா். விடுமுறை நாளான சனிக்கிழமை தனது நண்பா்கள் 3 பேருடன் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுற்றுலா வந்தாா். பிற்பகலில் இவா்கள் 4 பேரும் கீரிப்பாறை அருகே காளிகேசம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனா்.

அப்போது எதிா்பாராதவிதமாக அசோக் ஆற்றில் சுழல் நிறைந்த பகுதியில் மூழ்கினாா். அப்பகுதியிலுள்ளவா்களின் உதவியுடன் அவரை மீட்டு, பூதப்பாண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதையடுத்து சடலத்தை கீரிப்பாறை போலீஸாா் கைப்பற்றி, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.