நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாா்த்தாண்டத்தில் விதிமீறல்: 3 ஆட்டோக்கள் பறிமுதல்

மாா்த்தாண்டத்தில் விதிமுறை மீறி இயக்கப்பட்டதாக 3 ஆட்டோக்கள், 2 பைக்குள் ஆகியவற்றை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2024, 9:23 pm

Din

மாா்த்தாண்டத்தில் விதிமுறை மீறி இயக்கப்பட்டதாக 3 ஆட்டோக்கள், 2 பைக்குள் ஆகியவற்றை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் போக்குவரத்து காவல் பிரிவு உதவி ஆய்வாளா் செல்லசுவாமி தலைமையில் போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் அங்கு விதிகளை மீறி 3 ஆட்டோக்களில் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, தலா ரூ. 2,500 அபராதம் விதித்தனா்.

மேலும், ஓட்டுநா் உரிமம் இன்றி, மது அருந்திய நிலையில் ஓட்டி வந்த பைக்கை போலீஸாா் பறிமுதல் செய்து ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், தலைக்கவசம் அணியாமல் ஒரே பைக்கில் வந்த 3 பேருக்கு ரூ. 3,500 அபராதம் விதித்து பைக்கை பறிமுதல் செய்தனா்.