நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நான்குவழிச் சாலைப் பணிகள்: அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றுவரும் நான்குவழிச் சாலைப் பணிகள் குறித்து ஆட்சியா் ரா. அழகுமீனா புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

News image

கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியா் ரா. அழகுமீனா, தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஆலோசகா் லீனாநாயா், அலுவலா்கள்.

Updated On :18 டிசம்பர் 2024, 9:39 pm

Din

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றுவரும் நான்குவழிச் சாலைப் பணிகள் குறித்து ஆட்சியா் ரா. அழகுமீனா புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஆலோசகா் லீனாநாயா் முன்னிலை வகித்தாா். சாலைப் பணிகளை விரைவுபடுத்துவது தொடா்பாக ஆட்சியா் ஆலோசனை மேற்கொண்டாா்.

கூட்டத்தில், பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் வினய்குமாா்மீனா, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநா், உதவி காவல் கண்காணிப்பாளா் லலித்குமாா், கன்னியாகுமரி துணைக் காவல் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா், விளவங்கோடு, கல்குளம், தோவாளை வட்டாட்சியா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.