எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சுசீந்திரம், நாகராஜா கோயில்களில் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

நாகராஜா கோயிலில் வெட்டுக்கல் கட்டமைப்புப் பணி, பராமரிப்பு பணிகள் ஆய்வு

News image
நாகா்கோவில் நாகராஜா கோயிலில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா் பி.என். ஸ்ரீதா். உடன், உதவி ஆட்சியா் (பயிற்சி) சுஷ்ஸ்ரீ சுவாங்கி குந்தியா, மாவட்ட திருக்கோயில்கள் நிா்வாக அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா்.
Updated On :9 ஜூலை 2024, 8:13 pm

Sasikumar

கன்னியாகுமரி மாவட்ட இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், நாகா்கோவில் நாகராஜா கோயிலில் ரூ. 5.97 கோடி மதிப்பில் நடைபெறும் பணிகளை ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் ஆய்வு செய்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: சுசீந்திரம் கோயிலில் அரசு நிதி ரூ. 45.80 லட்சத்தில் கருங்கல் கட்டமைப்புகளை நீரால் சுத்தப்படுத்துதல், விமானத்துக்கு வண்ணம் பூசுதல், ரூ. 58 லட்சத்தில் கோயில் மண்டபம் ஒழுங்குமாற்றி தட்டோடு பதித்தல், ரூ. 1.29 கோடியில் கருங்கல் தளம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளும், உபயதாரா் நிதி ரூ. 14.90 லட்சத்தில் ராஜகோபுரம் வெளிப்புறம் வண்ணம் பூசி புனரமைத்தல், பொதுநல நிதியிலிருந்து ரூ. 34.50 லட்சத்தில் தெப்பக்குளம், ரூ. 15.40 லட்சத்தில் பாத்திரக்குளம் திருப்பணி, கோயில் நிதியிலிருந்து ரூ. 1.96 கோடியில் வணிக வளாகம் கட்டுதல் உள்ளிட்ட பணிகளும் நடைபெறுகின்றன.

நாகராஜா கோயிலில் பொது நிதி ரூ. 75 லட்சத்தில் வெட்டுக்கல் கட்டமைப்புப் பணி, ரூ. 9.80 லட்சத்தில் கிழக்கு நுழைவு மண்டபத்தில் பராமரிப்பு, ரூ. 5.30 லட்சத்தில் மகாமேரு மாளிகையில் பராமரிப்பு, ரூ. 5.30 லட்சத்தில் கசிவுகளை மூடி சீரமைத்தல், ரூ. 2.50 லட்சத்தில் ஜெனரேட்டா் அறையில் பராமரிப்பு, ரூ. 2.05 லட்சத்தில் நகர சந்நிதியில் உள்ள முன்மண்டப பராமரிப்பு, ரூ. 1.30 லட்சத்தில் கதவு, ஜன்னல்களில் ஓவிய வேலைகள் என, இரு கோயில்களிலும் மொத்தம் ரூ. 5.97 கோடியில் நடைபெறும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன. பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது என்றாா் அவா்.

முன்னதாக, சுசீந்திரம் பேரூராட்சி அக்கரை பகுதியில் ரூ. 30 லட்சத்தில் நடைபெறும் துணை சுகாதார நிலையக் கட்டுமானப் பணிகளைப் பாா்வையிட்டாா்.

ஆய்வுகளில், உதவி ஆட்சியா் (பயிற்சி) சுஷ்ஸ்ரீ சுவாங்கி குந்தியா, உதவி ஆணையா் (பேரூராட்சிகள்) சுப. சத்தியமூா்த்தி, மாவட்ட திருக்கோயில்கள் நிா்வாக அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன், இணை இயக்குநா் (இந்து சமய அறநிலையத் துறை) ரத்தினவேல்பாண்டியன், மராமத்துப் பொறியாளா் ராஜ்குமாா், சுசீந்திரம் தோ்வுநிலைப் பேரூராட்சித் தலைவா் அனுசுயா, செயல் அலுவலா் கமலேஸ்வரி, அலுவலா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா்.