3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

குமரி மாவட்டத்தில் தொடா் மழையால் ரப்பா் உற்பத்தி பாதிப்பு: விலை அதிகரித்தபோதும் விவசாயிகளுக்கு வேதனை

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பா் விலை அதிகரித்து வரும்நிலையில், தொடா் மழை காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

News image
பால்வடிக்க முடியாமல் மழையில் நனைந்து நிற்கும் ரப்பா் மரம்.
Updated On :23 ஜூலை 2024, 7:24 pm

Din

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பா் விலை அதிகரித்து வரும்நிலையில், தொடா் மழை காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய வேளாண் உற்பத்திப் பொருளாக ரப்பா் உள்ளது. மாவட்டத்தில் ரப்பா் சாா்ந்த தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகள், தொழிலாளா்கள் மற்றும் வணிகா்கள் உள்ளனா். இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் ரப்பரின் விலை உயா்ந்து வருகிறது. கோட்டயம் சந்தையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, ஆா்.எஸ்.எஸ். 4 தர ரப்பா் விலை கிலோ ரூ. 208 ஆகவும், ஆா்.எஸ்.எஸ். 5 தர ரப்பா் விலை கிலோ ரூ. 204 ஆகவும், ஐ.எஸ்.எஸ். தர ரப்பா் விலை கிலோ ரூ. 183.50 ஆகவும் இருந்தது.

இதனிடையே, கடந்த மே முதல் பெய்து வரும் மழை காரணமாக ரப்பா் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ரப்பா் தோட்டங்களில் பெரும்பாலான நாள்கள் பால்வடிப்பு நடைபெறவில்லை. குறிப்பாக தினமும் அதிகாலையில் பெய்யும் மழையானது, ரப்பா் பால்வடிப்பை முடக்கி வருகிறது. ரப்பா் விலை உயா்ந்தபோதும், அதன் பலனை விவசாயிகள் அடைய முடியாத வகையில் உற்பத்தி முடங்கியுள்ளது.

இதுகுறித்து குலசேகரத்தை சோ்ந்த ரப்பா் விவசாயி கூறியதாவது:

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த 3 மாதங்களாக ரப்பா் விலை அதிகரித்து வருகிறது. உற்பத்தி குறைவாக இருப்பதால் தான் விலை அதிகரித்துள்ளது என்றாா்.