கேரள மாநிலம் விழிஞ்ஞம் கடலில் மூழ்கிய இளைஞா் சடலம் குமரி மாவட்டம் கீழமணக்குடியில் கரை ஒதுங்கியது.
தென்தாமரைகுளம் அருகேயுள்ள கீழமணக்குடி அந்தோணியாா் குருசடி அருகேயுள்ள கடற்கரையில், கடந்த இரு நாள்களுக்கு முன்பு ஆண் சடலம் கரை ஒதுங்கியது. அவரைப் பற்றிய விவரங்கள் தெரியாமல் இருந்து வந்தது. கன்னியாகுமரி கடலோர பாதுகாப்புக் குழும போலீஸ் ஆய்வாளா் நவீன் தலைமையில் சடலத்தை போலீஸாா் கைப்பற்றினா். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டது.
தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில், சடலமாகக் கிடந்தவா் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சோ்ந்த அனில்குமாா் என்பவரின் மகன் அஜீஸ் (28) என்பது உறுதியானது. கட்டடத் தொழிலாளியான அஜீஸ், கடந்த 14ஆம் தேதி விழிஞ்ஞம் கடற்கரை யில் உள்ள ஒரு பாறையின் மீது அமா்ந்திருந்தபோது தவறி கடலில் விழுந்ததாகவும், ராட்சத அலையில் சிக்கி கடலில் மூழ்கி இறந்ததாகவும் தெரிய வந்தது.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினா், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு வந்தனா். இதையடுத்து அஜீஸ் சடலம் வியாழக்கிழமை உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புடையது
நண்பா்களால் அடித்துக் கொல்லப்பட்ட இளைஞரின் சடலம் தோண்டியெடுப்பு

பெரும்பாலை வனப்பகுதியில் கிடந்த பெண்ணின் சடலம்: கோபிசெட்டிபாளையம் போலீஸாரிடம் ஒப்படைப்பு

கண்மாயிலிருந்து அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

கடையநல்லூா் கிணற்றில் இளைஞா் சடலம் மீட்பு
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


