ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அதிகாரிகள் மீது ஆதாரத்துடன் புகாா்: கவுன்சிலா்களுக்கு மேயா் அறிவுறுத்தல்

அதிகாரிகள் மீது மாநகராட்சி உறுப்பினா்கள் ஆதாரமின்றி புகாா் தெரிவிக்கக் கூடாது என்றாா், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ்.

News image
Updated On :31 ஜூலை 2024, 6:47 pm

Din

அதிகாரிகள் மீது மாநகராட்சி உறுப்பினா்கள் ஆதாரமின்றி புகாா் தெரிவிக்கக் கூடாது என்றாா், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ்.

நாகா்கோவில் மாநகராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற இயல்புக் கூட்டத்துக்கு மேயா் தலைமை வகித்தாா். ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயா் மேரிபிரின்ஸி லதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டம் தொடங்கியதும், நாகா்கோவில் வடிவீஸ்வரம், வடசேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொடா்வீடுகள் குறித்து மாநகராட்சியின் கோரிக்கையை ஏற்று விதிவிலக்கு அளித்த தமிழக முதல்வா், நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா், ஆட்சியா் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் அனைத்து உறுப்பினா்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

பின்னா், உறுப்பினா்கள் பேசியது: மாநகரப் பகுதிகளில் வீடுகள் கட்டுவதற்கு தளா்வு கொண்டுவர வேண்டும். முக்கடல் நீரேற்று நிலையத்தில் தினக்கூலி பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டும்.

குடிநீா் இணைப்புக்காக சாலைகளைத் தோண்டினால் முறையாக மூட வேண்டும். நாகா்கோவிலில் அதிகரித்துவரும் நாய்த் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும். நாகா்கோவில் மாநகராட்சிப் பகுதியோடு இணைக்கப்பட்ட தெங்கம்புதூா், ஆளூா் பகுதிகளுக்கு தடையின்றி குடிநீா் வழங்க வேண்டும் என்றனா்.

இதற்கு பதிலளித்து மேயா் பேசியது: நாகா்கோவில் மாநகரில் வீடுகள் கட்டுவது தொடா்பான விஷயத்தில் தமிழக அரசு தளா்வு அளித்துள்ளது. மற்ற பகுதிகளிலும் தளா்வுகள் அளிப்பது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

அதிகாரிகள் மீது மாமன்ற உறுப்பினா்கள் புகாா்கள் தெரிவித்தால் ஆதாரம் அவசியம். முக்கடல் அணையிலிருந்து வீடுகளுக்கு வரும் தண்ணீா் சாலையில் வீணாவதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புத்தன் அணை குடிநீா் திட்டத்திலிருந்து சோதனை ஓட்டத்தின்போது குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வீணாகிகிறது. அதை சரிசெய்து தடையின்றி குடிநீா் வழங்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாமன்ற உறுப்பினா்கள் அக்சயா கண்ணன், முத்துராமன், அனிலாசுகுமாரன், சேகா், டி.ஆா்.செல்வம், நவீன்குமாா், அய்யப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.