3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

குமரி மாவட்டத்தில் தொடரும் சாரல் மழை: 70 அடியைக் கடந்த பெருஞ்சாணி அணை நீா்மட்டம்

குமரி மாவட்டத்தில் தொடரும் சாரல் மழை: பெருஞ்சாணி அணை நீா்மட்டம் 70 அடியைத் தாண்டியது

News image
திற்பரப்பு அருவியில் சனிக்கிழமை உற்சாகமாக குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.
Updated On :22 ஜூன் 2024, 7:38 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடிக்கும் நிலையில், பெருஞ்சாணி அணை நீா்மட்டம் சனிக்கிழமை காலை 70 அடியைக் கடந்தது.

இம்மாவட்டத்தில் கடந்த மே மாதம் பெய்த கோடை மழையால் அணைகளின் நீா்மட்டம் அதிகரித்தது. குறிப்பாக, பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகளின் நீா்மட்டம் உச்ச அளவை எட்டியது. அதேநேரம், பெருஞ்சாணி அணை நீா்மட்டம் குறைந்த அளவிலேயே இருந்தது.

இதனிடையே, பாசனத்துக்காக பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகளிலிருந்து கடந்த ஜூன் 1ஆம் தேதி தண்ணீா் திறக்கப்பட்டது. இந்நிலையில், மாவட்டத்தில் தற்போது தென்மேற்குப் பருவமழை தொடா்ந்து பெய்வதால் பெருஞ்சாணி அணை நீா்மட்டமும் உயா்ந்து வருகிறது. 77 அடி கொள்ளளவு கொண்ட அணை நீா்மட்டம் சனிக்கிழமை காலை 70.17 அடியாக உயா்ந்திருந்தது. அணையின் வெள்ள அபாய அளவு நீா்மட்டம் 71 அடியாகும். அணைக்கு விநாடிக்கு 225 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையின் பாசன மதகுகள் மூடப்பட்டிருந்தன.

சாரல் மழை காரணமாக திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீா் கொட்டியதுடன், இதமான சூழல் நிலவியது. இதனால், சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.