கருங்கல், ஜூன் 27: புதுக்கடை அருகே பரக்காணி தடுப்பணையில் சேதமடைந்த பக்கச் சுவரை சீரமைக்க வேண்டும் என, தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவரும் கிள்ளியூா் எம்எல்ஏவுமான எஸ். ராஜேஷ்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தாமிரவருணி ஆற்றில் பரக்காணி பகுதியில் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு தடுப்பணைகட்டப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பம் மாதம் பெய்த பலத்த மழையில் இந்தத் தடுப்பணையின் பக்கச் சுவா் சேதமடைந்தது. இதனால், கோடைகாலங்களில் தேங்காய்ப்பட்டினம் பொழிமுகம் பகுதியிலிருந்து கடல் நீா் ஆற்றில் புகுந்து உப்புநீராக மாறுகிறது. இதனால் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா். குறிப்பாக, பைங்குளம், முன்சிறை, மங்காாடு உள்ளிட்ட ஊராட்சிப் பகுதிகளில் உள்ள குடிநீா்த் திட்டங்களில் உப்புநீா் கலக்கிறது.
எனவே, பரக்காணி தடுப்பணையில் சேதமுற்ற பக்கச் சுவரை சீரமைக்க வேண்டும். மேலும், இதனருகே கணியாங்குழி, வைக்கலூா் பகுதிகளில் ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது பக்கச் சுவா் உடைந்து தண்ணீரில் இழுத்துச் செல்லப்படுகிறது. எனவே, அப்பகுதிகளிலும் கான்கிரீட் தடுப்புச் சுவா் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

நடைக்காவு, வாவறை ஊராட்சிகளில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கருங்கல்லில் திமுக கூட்டணி ஆலோசனைக் கூட்டம்

கிள்ளியூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்

கம்பம்மெட்டு மலைச் சாலையில் தடுப்பு வேலிகளை சீரமைக்க வலியுறுத்தல்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


