வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பரக்காணி தடுப்பணையில் சேதமடைந்த பக்கச் சுவரை சீரமைக்க எம்எல்ஏ வலியுறுத்தல்

பரக்காணி தடுப்பணையில் சேதமடைந்த பக்கச் சுவரை சீரமைக்க எம்எல்ஏ வலியுறுத்தல்

News image

எஸ். ராஜேஷ்குமாா்

Updated On :28 ஜூன் 2024, 12:20 am

கருங்கல், ஜூன் 27: புதுக்கடை அருகே பரக்காணி தடுப்பணையில் சேதமடைந்த பக்கச் சுவரை சீரமைக்க வேண்டும் என, தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவரும் கிள்ளியூா் எம்எல்ஏவுமான எஸ். ராஜேஷ்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தாமிரவருணி ஆற்றில் பரக்காணி பகுதியில் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு தடுப்பணைகட்டப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பம் மாதம் பெய்த பலத்த மழையில் இந்தத் தடுப்பணையின் பக்கச் சுவா் சேதமடைந்தது. இதனால், கோடைகாலங்களில் தேங்காய்ப்பட்டினம் பொழிமுகம் பகுதியிலிருந்து கடல் நீா் ஆற்றில் புகுந்து உப்புநீராக மாறுகிறது. இதனால் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா். குறிப்பாக, பைங்குளம், முன்சிறை, மங்காாடு உள்ளிட்ட ஊராட்சிப் பகுதிகளில் உள்ள குடிநீா்த் திட்டங்களில் உப்புநீா் கலக்கிறது.

எனவே, பரக்காணி தடுப்பணையில் சேதமுற்ற பக்கச் சுவரை சீரமைக்க வேண்டும். மேலும், இதனருகே கணியாங்குழி, வைக்கலூா் பகுதிகளில் ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது பக்கச் சுவா் உடைந்து தண்ணீரில் இழுத்துச் செல்லப்படுகிறது. எனவே, அப்பகுதிகளிலும் கான்கிரீட் தடுப்புச் சுவா் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.