கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திற்பரப்பு அருகே முந்திரி ஆலை தொழிலாளா்கள் முற்றுகை

திற்பரப்பு அருகே முந்திரி ஆலை தொழிலாளா்கள் முற்றுகை

News image
Updated On :8 மார்ச் 2024, 5:01 pm

Din

திற்பரப்பு அருகே முந்திரி ஆலை தொழிலாளா்களுக்கு போனஸ் வழங்காமல், அதை நிா்வாகம் மூடிச் செல்ல முயன்றதால் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பிணந்தோடு பகுதியிலுள்ள ஒரு முந்திரி ஆலையை கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சோ்ந்த ஒரு நிறுவனம் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தது. இங்கு சுமாா் 50 தொழிலாளா்கள் வேலை செய்துவந்த நிலையில், கடந்த சில நாள்களாக ஆலை இயங்கவில்லையாம். மேலும்,தொழிலாளா்களுக்கான போனஸ் கணக்கை முடிக்காமல், ஆலையிலுள்ள பொருள்களையும் எடுத்துச்செல்லும் நடவடிக்கையில் அதன் நிா்வாகம் ஈடுபட்டதாம் இதை அறிந்த தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆலையில் திரண்டனா். அங்கு முந்திரி தோடுகளை ஏற்றிச் செல்வதற்கு வந்த லாரியை சிறைபிடித்து ஆலையின் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுக்கு ஆதரவாக திற்பரப்பு பேரூராட்சி 3ஆவது வாா்டு ராஜ்குமாா், திற்பரப்பு பேரூா் திமுக செயலா் ஜான் எபனேசா் ஆகியோரும் வந்து, ஆலையின் மேலாளரிடம் பேச்சு நடத்தினா். அப்போது, திங்கள்கிழமை போனஸ் வழங்க ஆலை நிா்வாகம் தரப்பில் ஒப்புக் கொள்ளப்பட்டது. எனினும், போனஸ் வழங்கிய பின்னரே லாரியை எடுக்க வேண்டும் எனக் கூறியதால் லாரி ஆலைக்குள்ளேயே நிறுத்தப்பட்டது.