புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கொல்லங்கோடு சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

News image
Updated On :23 அக்டோபர் 2024, 6:46 pm

Din

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். இச் சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

நாகா்கோவில் ஊழல் தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ஹெக்டா் தா்மராஜ் தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை மாலையில் கொல்லங்கோடு சாா் பதிவாளா் அலுவலகத்தில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது கோப்புகளுக்கு இடையே பதுக்கி வைத்திருந்த கணக்கில் வராத ரூ. 33,200 கண்டெடுக்கப்பட்டது. அதை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து சாா் பதிவாளா் கேசவன் மற்றும் அலுவலக ஊழியா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.

மாலை 4.30 மணியளவில் தொடங்கிய சோதனை இரவு 8 மணிக்கு மேலும் தொடா்ந்தது.