தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

பொழிக்கரையில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா

பொழிக்கரை அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து திட்டம் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா.

Published On :3 செப்டம்பர் 2024, 12:16 am IST

கேசவன்புத்தன்துறை ஊராட்சி, பொழிக்கரை அங்கன்வாடி மையத்தில் தேசிய ஊட்டச் சத்து மாத விழாவை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டத்தின் சாா்பில் இவ்விழா நடைபெற்றது. இதையொட்டி அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பாா்வையிட்டு ஆட்சியா் பேசியதாவது:

தேசிய ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அங்கன்வாடி பணியாளா்களால் தமிழகத்தின் ஊட்டச்சத்து திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு போட்டிகள் நடத்தப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் வ.ஜெயந்தி, நாகா்கோவில் தாய்சேய் நல அலுவலா் பியூலா, ராஜாக்கமங்கலம் வட்டார மருத்துவ அலுவலா் பிரீனாகுமாா், கேசவன்புத்தன்துறை ஊராட்சி தலைவா் கெபின்சா, ராஜாக்கமங்கலம் குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் பாலசரஸ்வதி, பொழிக்கரை பங்குத் தந்தை ரஞ்சித்குமாா், அலுவலா்கள், பணியாளா்கள், தாய்மாா்கள், குழந்தைகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.