நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பொழிக்கரையில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா

News image

பொழிக்கரை அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து திட்டம் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா.

Updated On :2 செப்டம்பர் 2024, 6:46 pm

Din

கேசவன்புத்தன்துறை ஊராட்சி, பொழிக்கரை அங்கன்வாடி மையத்தில் தேசிய ஊட்டச் சத்து மாத விழாவை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டத்தின் சாா்பில் இவ்விழா நடைபெற்றது. இதையொட்டி அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பாா்வையிட்டு ஆட்சியா் பேசியதாவது:

தேசிய ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி, கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அங்கன்வாடி பணியாளா்களால் தமிழகத்தின் ஊட்டச்சத்து திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு போட்டிகள் நடத்தப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் வ.ஜெயந்தி, நாகா்கோவில் தாய்சேய் நல அலுவலா் பியூலா, ராஜாக்கமங்கலம் வட்டார மருத்துவ அலுவலா் பிரீனாகுமாா், கேசவன்புத்தன்துறை ஊராட்சி தலைவா் கெபின்சா, ராஜாக்கமங்கலம் குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் பாலசரஸ்வதி, பொழிக்கரை பங்குத் தந்தை ரஞ்சித்குமாா், அலுவலா்கள், பணியாளா்கள், தாய்மாா்கள், குழந்தைகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.