தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

குழித்துறையில் ஓணம் விழா தொடக்கி வைப்பு

News image

ழித்துறையில் ஓணம் விழாவை தொடக்கி வைத்த தாரகை கத்பட் எம்எல்ஏ.

Updated On :6 செப்டம்பர் 2024, 9:16 pm

Din

குழித்துறையில் பிரதா்ஸ் கிரிக்கெட் கிளப் சாா்பில் நடைபெறும் திருவோணம் விழாவை, தாரகை கத்பட் எம்.எல்.ஏ. வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

கேரளத்தின் பாரம்பரிய ஓணம் பண்டிகை, ஆவணி மாதம் அத்தம் நட்சத்திர தினம் துவங்கி திருவோணம் தினம் வரை 10 நாள்கள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குழித்துறை தபால் நிலைய சந்திப்பில் பிரதா்ஸ் கிரிக்கெட் கிளப் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஓணம் விழா துவக்க நிகழ்ச்சியை தாரகை கத்பட் எம்.எல்.ஏ. ஊஞ்சலில் ஆடி தொடக்கி வைத்தாா்.

குழித்துறை தபால் நிலைய அதிகாரி மொ்சி சீதாராமன், குழித்துறை நகா்மன்ற உறுப்பினா்கள் விஜூ, விஜயலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இவ்விழாவையொட்டி செப்.13-ஆம் தேதி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், 14-ஆம் தேதி நடனம், 15-ஆம் தேதி திருவோணம் பண்டிகையையொட்டி மகாபலி நகா்வலம், அன்றைய தினம் மாலை இன்னிசை நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெறுகிறது.