தக்கலை, செப். 8: தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையில்
ஓணம் விழா அண்மையில் தொடங்கியது.
கேரள மாநில தொல்பொருள் ஆய்வுத்துறையின்கீழ் உள்ள
பத்மநாபபுரம் அரண்மனையில், ஆண்டுதோறும் ஓணம் விழா 10 நாள்கள் கொண்டாடப்படும். வயநாடு பேரிடா் சம்பவத்தையடுத்து, நிகழ் ஆண்டில் கேரள அரசு சாா்பில் நடத்தப்படும் ஓணம் விழாக்கள் ரத்து செய்யப்பட்டன. பத்மநாபபுரம் அரண்மனை தமிழக பகுதியில் இருப்பதால், அரண்மனை ஊழியா்களால் எளிய முறையில்
ஓணம் விழா கொண்டாடப்படுகிறது.
மலையாள அத்தம் நட்சத்திர நாளான வெள்ளிக்கிழமை ஓணம் விழா தொடங்கியது. இதையொட்டி அரண்மனை வளாகத்தில்
ஊழியா்கள் அத்தப்பூ கோலமிட்டனா். அதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனா். அரண்மனையில் அமைக்கப்பட்டிருந்த ஓண ஊஞ்சலில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் ஆடி மகிழ்ந்தனா்.
அரண்மனை அதிகாரி சது மற்றும் ஊழியா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

ஸ்ரீவில்லிபுத்தூா் திருமலை நாயக்கா் அரண்மனையை தமிழக தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரக் கோரிக்கை
பேரவைத் தொகுதி அறிமுகம்! பத்மநாபபுரம்

கணினி குலுக்கல் முறையில் தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் தெரிவு! 9 தொகுதிகளுக்கும் பாதுகாப்பாக அனுப்ப ஏற்பாடு!

தக்கலை நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் நூலக கட்டடம் கட்ட அடிக்கல்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


