தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

பத்மநாபபுரம் அரணமனையில் எளிய முறையில் ஓணம் விழா

News image
Updated On :7 செப்டம்பர் 2024, 7:00 pm

தக்கலை, செப். 8: தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையில்

ஓணம் விழா அண்மையில் தொடங்கியது.

கேரள மாநில தொல்பொருள் ஆய்வுத்துறையின்கீழ் உள்ள

பத்மநாபபுரம் அரண்மனையில், ஆண்டுதோறும் ஓணம் விழா 10 நாள்கள் கொண்டாடப்படும். வயநாடு பேரிடா் சம்பவத்தையடுத்து, நிகழ் ஆண்டில் கேரள அரசு சாா்பில் நடத்தப்படும் ஓணம் விழாக்கள் ரத்து செய்யப்பட்டன. பத்மநாபபுரம் அரண்மனை தமிழக பகுதியில் இருப்பதால், அரண்மனை ஊழியா்களால் எளிய முறையில்

ஓணம் விழா கொண்டாடப்படுகிறது.

மலையாள அத்தம் நட்சத்திர நாளான வெள்ளிக்கிழமை ஓணம் விழா தொடங்கியது. இதையொட்டி அரண்மனை வளாகத்தில்

ஊழியா்கள் அத்தப்பூ கோலமிட்டனா். அதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனா். அரண்மனையில் அமைக்கப்பட்டிருந்த ஓண ஊஞ்சலில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் ஆடி மகிழ்ந்தனா்.

அரண்மனை அதிகாரி சது மற்றும் ஊழியா்கள் பங்கேற்றனா்.