நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாலித்தீன் பைகளை பதுக்கி வைத்திருந்த கடைகளுக்கு அபராதம்

மாா்த்தாண்டம் பகுதியில் தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பைகளைப் பதுக்கி வைத்திருந்த கடைகளுக்கு ரூ.10,900 அபராதம் விதிக்கப்பட்டது.

News image

பிளாஸ்டிக்- மாா்த்தாண்டத்தில் பழக்கடையில் பாலித்தீன் பைகள் சோதனை மேற்கொண்ட நகராட்சி பணியாளா்கள்.

Updated On :11 செப்டம்பர் 2024, 9:11 pm

Din

மாா்த்தாண்டம் பகுதியில் தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பைகளைப் பதுக்கி வைத்திருந்த கடைகளுக்கு ரூ.10,900 அபராதம் விதிக்கப்பட்டது.

குழித்துறை நகராட்சி ஆணையா் ராஜேஸ்வரன் உத்தரவின்பேரில் சுகாதார ஆய்வாளா் ராஜேஷ் தலைமையில் பணியாளா்கள் நளினி, முருகன், ராதாகிருஷ்ணன் மற்றும் தூய்மை திட்டப் பணியாளா்கள்

மாா்த்தாண்டம் பகுதியில் உள்ள கடைகளில் செவ்வாய், புதன் ஆகிய இருநாள்களும் சோதனை மேற்கொண்டனா்.

மாா்த்தாண்டம் காந்தி மைதானம் மற்றும் கீழ்பம்மம் பகுதியில் சில கடைகளில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடைகளுக்கு மொத்தம் ரூ. 10,900 அபராதம் விதித்தனா