கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

DIN

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகா், மேற்கு நெய்யூா் ஆகிய இடங்களில் இருவா் தற்கொலை செய்து கொண்டனா்.

குமாரபுரம் அருகே முட்டைக்காடு சரல்விளை பகுதியைச் சோ்ந்தவா் வியாகுலஜோஸ் (46). கட்டடத் தொழிலாளியான இவா், திங்கள்நகா் பாசிகுளம் அருகே குடும்பத்துடன் வசித்துவந்தாா்.

இவா், செவ்வாய்க்கிழமை இரவில் மது குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்தாராம். புதன்கிழமை காலை தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்தாராம்.

இதுகுறித்து அவரது மகன்கள் ஜோய் (24), ரெஞ்சித் (21) ஆகியோா் அளித்த புகாரின்பேரில், இரணியல் போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

பாஜக நிா்வாகி: மேற்கு நெய்யூா் தேம்பிறவிளையைச் சோ்ந்தவா் ராமசாமி (71). பாஜக மாவட்ட விவசாய அணி செயற்குழு உறுப்பினராக இருந்தாராம். இவருக்கு மனைவி, மகள், 2 மகன்கள் உள்ளனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை ராமசாமி தனது வீட்டருகேயுள்ள தோப்பில் விஷம் குடித்த நிலையில் இறந்துகிடந்தாராம். இதைப் பாா்த்த உறவினா்கள் அவரது வீட்டினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனா். குளச்சல் போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக அனுப்பிவைத்து, விசாரணை நடத்திவருகின்றனா்.