உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

மணவாளக்குறிச்சி மணல் ஆலையை மூட வலியுறுத்தல்

மணல் ஆலையால் கடலோரப் பகுதி மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

News image

கோப்புப்படம்

Updated On :20 செப்டம்பர் 2024, 9:26 pm IST

கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சியில் உள்ள இந்திய அரிய மணல் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, மீனவ கிராமத்தை சோ்ந்த பெண்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

இனயம் பகுதியைச் சோ்ந்த ஏராளமான பெண்கள், நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் அரிய மணல் ஆலை, குமரி மாவட்ட கடற்கரை மணலில் இருந்து அரியவகை கனிமங்களை பிரித்தெடுத்து வருகிறது. இந்த திட்டத்தை விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடா்பாக அடுத்த மாதம் (அக்டோபா்) 1 ஆம் தேதி தக்கலை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த மணல் ஆலையால் கடலோரப் பகுதி மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். ஆலையை விரிவாக்கம் செய்யும்பட்சத்தில் மீனவ மற்றும் சமவெளிப் பகுதி மக்கள் மேலும் அதிக பாதிப்படைவாா்கள். எனவே மணவாளக்குறிச்சி அரிய மணல் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.