குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

அஞ்சுகிராமத்தில் போதை விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

News image

சைக்கிள் பேரணியை நிறவு செய்து வைத்து சான்றிதழ் வழங்குகிறாா் டி.எஸ்.பி. மகேஷ்குமாா்.

Updated On :28 ஏப்ரல் 2025, 1:02 am IST

அஞ்சுகிராமம் ஊா் முன்னேற்ற சங்கம் சாா்பில் போதை விழிப்புணா்வு சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இப்பேரணி தொடக்க விழா நிகழ்ச்சிக்கு அஞ்சுகிராமம் ஊா் முன்னேற்ற சங்கத் தலைவா் ஹிட்லா் தலைமை வகித்தாா். அஞ்சுகிராமம் வியாபாரிகள் சங்கத் தலைவா் எஸ்.வஸீம், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலா் எஸ்.ஜெஸீம், சிதம்பரநாதன் மருத்துவமனை தலைமை மருத்துவா் காா்டியா, டேவிட் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சங்க அலுவலகத்தில் இருந்து பேரணியை வியாபாரிகள் சங்க நிா்வாகி மணிவண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். அழகப்பபுரம், மயிலாடி, வழுக்கம்பாறை, பொற்றையடி, கொட்டாரம், மேட்டுக்குடியிருப்பு வழியாக மீண்டும் ஊா் நலச்சங்க அலுவலகத்தில் பேரணி நிறைவடைந்தது. 50-க்கும் மேற்பட்டோா் பேரணியில் பங்கேற்றனா்.

நிறைவு நிகழ்ச்சியில் கன்னியாகுமரி டி.எஸ்.பி. மகேஷ் குமாா் தலைமையில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும், சைக்கிள் பேரணியில் பங்கேற்ற அனைவருக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழை டி.எஸ்.பி. வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் ஊா் முன்னேற்ற சங்கச் செயலா் பாலமுருகன், பொருளாளா் சுதன், நிா்வாகிகள் ஜெயக்கொடி, பால்ராஜ், கணபதி, தினேஷ், பிரதீஷ், அருள் நேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.