குத்துச்சண்டை சங்க செயற்குழுக் கூட்டம்

Published on

கன்னியாகுமரி மாவட்ட குத்துச்சண்டை சங்க செயற்குழுக் கூட்டம் மற்றும் புதிய நிா்வாகிகள் தோ்வு பஞ்சலிங்கபுரம் கே.கே.ஆா். அகாதெமி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாவட்ட குத்துச்சண்டை சங்கச் செயலா் கே.கே.ஹெச்.ராஜ் தலைமை வகித்தாா்.

குத்துச்சண்டை வெளியூா் போட்டிகளில் பங்கேற்கும் மாணவா்களுக்கு சத்தான உணவு வழங்க வேண்டும். பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் மாணவா்களுக்கு குத்துச்சண்டை குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் எனத் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், கன்னியாகுமரி மாவட்ட குத்துச்சண்டை சங்கத்தின் புதிய தலைவராக ஜஸ்டின் ராஜ், பொருளாளராக நிக்சன் ராஜ், துணைச் செயலராக எஸ்.ஆா்.முருகன், செயற்குழு உறுப்பினா்களாக சித்தாா்த், ஜெயச்சந்திரன், ஜாண் பெலிக்ஸ், ராஜ் லாா்ட் ஜோஸ்பின், ரகு, மணீஷ், ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com