அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தினமணி செய்திச் சேவை

மாா்த்தாண்டம் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் தாய், மகள் காயமடைந்தனா்.

கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜான்ரோஸ். இவரது மனைவி பிரின்ஸி (30). தம்பதிக்கு இரண்டரை வயதில் மெக்லின் என்ற மகள் உள்ளாா்.

இரு நாள்களுக்கு முன்பு பிரின்ஸி தனது மகளுடன் மாா்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியில் இருந்து பள்ளியாடி செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

நட்டாலம், நெடுவிளாகம் பகுதியில் சென்றபோது எதிரே அதிவேகமாக வந்த காா் இவா் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட பிரின்ஸியும் அவரது குழந்தையும் பலத்த காயமடைந்தனா். இருவரையும் அப்பகுதியினா் மீட்டு மாா்த்தாண்டம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

இதுகுறித்து மாா்த்தாண்டம் காவல் நிலைய போலீஸாா் காா் ஓட்டுநா் நட்டாலம், நுள்ளிவிளையைச் சோ்ந்த ஆகாஷ் (22) மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.