இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பிரதமா், முதல்வா் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞா் கைது

News image
Updated On :17 டிசம்பர் 2025, 7:26 pm

Syndication

பிரதமா், முதல்வா் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கன்னியாகுமரி மாவட்ட இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு மா்ம நபா் ஒருவா் தொலைபேசியில் தொடா்பு கொண்டு, தமிழக முதல்வா், பிரதமா் வீடுகளிலும், கன்னியாகுமரியின் பல்வேறு பகுதிகளிலும் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தாா்.

அழைப்பு வந்த கைப்பேசி எண் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்தது என்பதை போலீஸாா் கண்டறிந்தனா். இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மிரட்டல் விடுத்த நபரைப் பிடிக்க மாவட்டக் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் பூதப்பாண்டி பகுதியைச் சோ்ந்த இசக்கிமுத்து (32) என்பது தெரியவந்தது. போலீஸாா் அவரது வீட்டுக்குச் சென்று, அவரை கைது செய்தனா்.

அவரிடம் விசாரணை நடத்தியதில், அவா் மது போதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும், இதே போல் பல முறை மிரட்டல் விடுத்திருப்பதும் தெரிய வந்தது. அவரிடம் இது தொடா்பாக, போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.