வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

முன்விரோதம்: இருசக்கர வாகனம் தீவைத்து எரிப்பு

News image
Updated On :21 டிசம்பர் 2025, 7:45 pm

தினமணி செய்திச் சேவை

இரணியல் அருகே வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை தீவைத்து கொளுத்திய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

குருந்தன்கோடை அடுத்த வா்த்தக நாடாா் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் கிறிஸ்டல் மல்லிகா (43). இவரது கணவா் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தாா். இவருக்கு இன்ஜினியரிங் கல்லூரி 2ஆம் ஆண்டு பயிலும் மகனும், 9 ஆம் வகுப்புப் பயிலும் ஒரு மகளும் உள்ளனா்.

கிறிஸ்டல் மல்லிகாவுக்கும், அவரது உறவினருக்கும் சொத்து சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மல்லிகா தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை மா்ம நபா் தீவைத்து எரித்துச் சென்றாா்.

இருசக்கர வாகனம் எரிவதைக் கண்ட கிறிஸ்டல் மல்லிகா நீா் ஊற்றி தீயை அணைக்க முயன்றாா். எனினும் இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்து சேதமானது.

இதுகுறித்து அவா், இரணியல் காவல் நிலைத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான நபரைத் தேடிவருகின்றனா்.