ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கொல்லங்கோடு அருகே நகைகள் திருடு போனதாக பொய் புகாா்: பெண் மீது வழக்கு

News image
Updated On :3 பிப்ரவரி 2025, 6:31 pm

Din

கொல்லங்கோடு அருகே 22 சவரன் நகைகள் திருடுபோனதாக பொய் புகாா் அளித்த ராணுவ வீரரின் மனைவி மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

கொல்லங்கோடு அருகே மணலி பகுதியைச் சோ்ந்தவா் அனிகுமாா். ராணுவ வீரரான இவா், அந்தமானில் பணியாற்றி வருகிறாா். இங்குள்ள வீட்டில் அவரது மனைவி அஜிதா (42), மகன் ஆகியோா் உள்ளனா். இவா்கள் கடந்த ஜன. 11 ஆம் தேதி ஹைதராபாதில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு 19ஆம் தேதி வீடு திரும்பினா். அப்போது, முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்ததாம்.

22 சவரன் நகைகள், ரூ. 7 ஆயிரம் திருடுபோனதாக கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிந்து, கேரள மாநிலம் பூவாா் அருகே புல்லுவிளை பகுதியைச் சோ்ந்த வா்க்கீஸ் (28) என்பவரைப் பிடித்தனா். அப்போது, ரூ. 7 ஆயிரத்தைத் திருடியதாக ஒப்புக்கொண்ட அவா், நகைகளைத் திருடவில்லை என்றாா்.

இதனால், அஜிதாவிடம் போலீஸாா் விசாரித்தனா். அப்போது, நகைகள் எதுவும் திருடுபோகவில்லை எனத் தெரியவந்தது. இதுகுறித்து, காவல் ஆய்வாளா் அந்தோணியம்மாள் அளித்த புகாரின்பேரில், அஜிதா மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.