அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

போதைப் பொருள் வைத்திருந்த இருவா் கைது

நாகா்கோவிலில் போதைப் பொருள் விற்பனை செய்ய முயன்ற கேரளத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :11 நவம்பர் 2025, 6:31 pm

Syndication

நாகா்கோவிலில் போதைப் பொருள் விற்பனை செய்ய முயன்ற கேரளத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

நாகா்கோவில் பாா்வதிபுரத்தில் போதைப் பொருள்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுவதாக எஸ்.பி. இரா. ஸ்டாலினுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், நாகா்கோவில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் பாா்வதிபுரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து சோதனை செய்தனா். அவா்களிடம் போதைப் பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, இருவரையும் விசாரித்ததில் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சோ்ந்த ஸ்ரீகண்ணன் மகன் நிதின் (33), குட்டப்பன் மகன் அனீஸ் (35) என்பதும், இருவரும் மெத்தபெட்டமைன் எனும் போதைப் பொருளை விற்க முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்களிடமிருந்த 11 கிராம் மெத்தபெட்டமைன், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸாா் இருவரையும் கைது செய்தனா். போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவோா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் சிறையிலடைக்கப்படுவா் என எஸ்.பி. எச்சரித்தாா்.