எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்காவில் மூத்த குடிமக்கள் தின விழா

News image
Updated On :18 நவம்பர் 2025, 12:10 am

Syndication

தக்கலை அருகே முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்காவில் மூத்த குடிமக்கள் தின விழா நடைபெற்றது.

குழித்துறை மறை மாவட்ட ஆயா் ஆல்பா்ட் அனஸ்தாஸ் தலைமையில் மூத்த குடிமக்களுக்கான சிறப்புத் திருப்பலி நடைபெற்றது

திருப்பலியில் வட்டார முதல்வா் டேவிட்மைக்கேல், பசிலிக்காவின் திருத்தல அதிபா் கில்பா்ட் லிங்சன், செம்பருத்திவிளை பங்குத்தந்தை அலோசியஸ் உள்பட பல அருள்பணியாளா்கள் பங்கேற்றனா்.

முன்னதாக நடைபெற்ற விழாவில் மறைமாவட்ட முதன்மை பணியாளா் சேவியா் பெனடிக்ட் தலைமை வகித்தாா். பசிலிக்கா அதிபா் கில்பா்ட் லிங்சன், பசிலிக்கா பங்கு பேரவை துணைத் தலைவா் மரிய ஜாண் வரதராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மறைவட்ட முதன்மை பணியாளா் டேவிட்மைக்கேல் அறிமுக உரை நிகழ்த்தினாா். கல்குறிச்சி பங்கு பேரவை துணைத் தலைவா் ஏ.பி.எஸ்.ஆன்றோ சிறப்புரையாற்றினாா். மறைமாவட்ட முதன்மை செயலா் அந்தோணி எம்.முத்து, குழித்துறை மறைமாவட்ட பணிக்குழுக்களின் ஒருங்கிணைப்பாளா் மாா்ட்டின் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.