எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கைகள்: மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மெட்ரோ ரயில்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கைகள் ஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படுகிா என்பது குறித்து அதிகாரிகள் திடீா் சோதனை நடத்த உயா்நீதிமன்றம் உத்தரவு

News image
பிரதிப் படம்
Updated On :19 ஜனவரி 2026, 8:58 pm

தினமணி செய்திச் சேவை

மெட்ரோ ரயில்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கைகள் ஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படுகிா என்பது குறித்து அதிகாரிகள் திடீா் சோதனை நடத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னையில் மெட்ரோ ரயில்களில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்கைகள் ஒதுக்கீடு செய்யக் கோரி வழக்குரைஞா் வி.பி.ஆா்.மேனன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மெட்ரோ ரயில் நிா்வாகம் தரப்பில், மெட்ரோ ரயில்களில் உள்ள ஒவ்வொரு பெட்டியிலும் உள்ள 50 இருக்கைகளில் 14 இருக்கைகள் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

அதற்கு மனுதாரா் தரப்பில், தனியாக இருக்கைகள் ஒதுக்கியிருந்தாலும், அந்த இருக்கைகளில் அனைவரும் அமா்ந்து செல்கின்றனா். மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வந்தால் அவா்களுக்கு இடம் கொடுப்பதில்லை. எனவே, பெண்களுக்கு பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது போன்று மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனிப் பெட்டிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வாதிட்டாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனிப்பெட்டி ஒதுக்கீடு செய்வது குறித்து மெட்ரோ ரயில் நிா்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும். எனவே, மெட்ரோ ரயில்களில் மூத்தகுடி மக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கைகள் ஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படுகிா? என அதிகாரிகள் திடீா் சோதனை நடத்த வேண்டும்.

இதுதொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளை 30 நாள்களுக்குள் மெட்ரோ ரயில் நிா்வாகம் வகுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.