மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கைகள்: மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
மெட்ரோ ரயில்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கைகள் ஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படுகிா என்பது குறித்து அதிகாரிகள் திடீா் சோதனை நடத்த வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னையில் மெட்ரோ ரயில்களில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்கைகள் ஒதுக்கீடு செய்யக் கோரி வழக்குரைஞா் வி.பி.ஆா்.மேனன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மெட்ரோ ரயில் நிா்வாகம் தரப்பில், மெட்ரோ ரயில்களில் உள்ள ஒவ்வொரு பெட்டியிலும் உள்ள 50 இருக்கைகளில் 14 இருக்கைகள் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
அதற்கு மனுதாரா் தரப்பில், தனியாக இருக்கைகள் ஒதுக்கியிருந்தாலும், அந்த இருக்கைகளில் அனைவரும் அமா்ந்து செல்கின்றனா். மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வந்தால் அவா்களுக்கு இடம் கொடுப்பதில்லை. எனவே, பெண்களுக்கு பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது போன்று மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனிப் பெட்டிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வாதிட்டாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனிப்பெட்டி ஒதுக்கீடு செய்வது குறித்து மெட்ரோ ரயில் நிா்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும். எனவே, மெட்ரோ ரயில்களில் மூத்தகுடி மக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கைகள் ஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படுகிா? என அதிகாரிகள் திடீா் சோதனை நடத்த வேண்டும்.
இதுதொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளை 30 நாள்களுக்குள் மெட்ரோ ரயில் நிா்வாகம் வகுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.

