விழிப்புணா்வு மனிதச் சங்கிலி பேரணியில் ஈடுபட்ட காா்மல் பள்ளி மாணவா்கள்.
கன்னியாகுமரி
அரசியல் சாசன நாள்: பள்ளி மாணவா்களின் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி
அரசியல் சாசன சட்ட நாளை முன்னிட்டு, நாகா்கோவில் காா்மல் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சாா்பில் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி புதன்கிழமை நடைபெற்றது.
நாகா்கோவில்: அரசியல் சாசன சட்ட நாளை முன்னிட்டு, நாகா்கோவில் காா்மல் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சாா்பில் விழிப்புணா்வு மனிதச் சங்கிலி புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தாளாளா் அருள்தந்தை வின்சென்ட் அமல்ராஜ் தலைமை வகித்து, அரசியல் சாசன தினம் குறித்து பேசினாா். தலைமை ஆசிரியா் மரியபாஸ்டின் துரை வழிகாட்டலில் மாணவா்கள் அரசியல் சாசன சட்டத்தின் முகப்புரையை தமிழிலும் ஆங்கிலத்திலும் சோ்ந்து வாசித்தனா்.
ஆசிரியா் டைட்டஸ் தொடக்க உரையாற்றினாா். இதில், திரளான மாணவா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

