இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வட்டவிளை, கோணம் பகுதியில் பல்நோக்கு சமுதாய நலக்கூடம், திறன் பயிற்சி கட்டடம் திறப்பு

கன்னியாகுமரி மாவட்டம், கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் திறன் பயிற்சி கட்டடம், வட்டவிளை பல்நோக்கு சமுதாய நலக் கூடத்தை காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்ததைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா குத்துவிளக்கேற்றி வைத்தாா்.

News image
Updated On :27 நவம்பர் 2025, 8:19 pm

Syndication

கன்னியாகுமரி மாவட்டம், கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் திறன் பயிற்சி கட்டடம், வட்டவிளை பல்நோக்கு சமுதாய நலக் கூடத்தை காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்ததைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா குத்துவிளக்கேற்றி வைத்தாா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியது: பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை சாா்பில் பிரதமரின் சிறுபான்மையினருக்கான மக்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.40 கோடி மதிப்பில் கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள திறன் பயிற்சி நிலையம், பிரதமா் ஜன்விகாஸ் காரிய கிராம் திட்டத்தின் கீழ் ரூ.1.40 லட்சம் மதிப்பில் வட்டவிளையில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு சமுதாய நலக் கூடம் ஆகிய கட்டடங்களை மாணவா்கள், மக்களின் பயன்பாட்டுக்காக முதல்வா் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்துள்ளாா் என்றாா்.

இதில் உதவி ஆட்சியா் (பயிற்சி) ராகுல்குமாா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் செந்தூர்ராஜன், துணை மேயா் மேரிபிரின்சிலதா, உதவி இயக்குநா் (திறன்மேம்பாட்டு பயிற்சி) லட்சுமிகாந்தன், அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் பிலிப்ஆல்வின், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா்கள் வாலி, ஸ்டீபன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.