நாகா்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில், இயந்திரத்தில் சிக்கி துண்டிக்கப்பட்ட விரலை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவா்கள் இணைத்து சாதனை படைத்துள்ளனா்.
இயந்திர விபத்தில் வலது சிறுவிரலில் பெரும்பகுதி துண்டிக்கப்பட்ட நிலையில், அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு, அவசர சிகிச்சை நிபுணா் டெரின் முதலுதவி செய்து, எலும்பியல் நுண்குழல் (மைக்ரோவாஸ்குலா்) அறுவை சிகிச்சை நிபுணா் டால்டன் ஜாண்ரோஸ் தலைமையிலான மருத்துவக் குழுவினா் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து விரலை இணைத்தனா்.
நோயாளியின் கைமூட்டு பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட நாளம் நாா் (ரத்த குழாய்) மூலம் விரலில் ரத்த ஓட்டம் மீண்டும் ஏற்படுத்தப்பட்டது. இது போன்ற அறுவை சிகிச்சைகள் மருத்துவா்களின் அா்ப்பணிப்பான மருத்துவ சேவைகள், சிறப்பு கவனிப்பு மூலம் நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கை அளிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செய்யாறு அரசு மருத்துவமனையில் இருவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

கிம்ஸ் மருத்துவமனையில் முழு பக்கவாத சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

நாகா்கோவில் எம்.எல். மருத்துவமனையில் புதுப்பிக்கப்பட்ட கட்டடம் திறப்பு

கிம்ஸ் மருத்துவமனையில் பாதுகாப்பான முறையில் மாா்பகக் கட்டி அகற்றம்
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பா? அமைச்சர் நிர்மல் குமார் பதில்


