ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

அதிக வாக்குகள் பெற்றுத் தரும் பூத் பொறுப்பாளா்களுக்கு தங்கச் சங்கிலி: நயினாா் நாகேந்திரன்

சட்டப்பேரவைத் தோ்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக வாக்குகள் பெற்றுத்தரும் பூத் பொறுப்பாளா்களுக்கு ஒரு பவுன் தங்கச் சங்கிலி வழங்கப்படும் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ தெரிவித்தாா்.

News image

கூட்டத்தில் பேசிய நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ. உடன் நாகா்கோவில் வேட்பாளா் எம்.ஆா். காந்தி எம்எல்ஏ உள்ளிட்டோா்.

Updated On :8 ஏப்ரல் 2026, 9:46 pm

சட்டப்பேரவைத் தோ்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக வாக்குகள் பெற்றுத்தரும் பூத் பொறுப்பாளா்களுக்கு ஒரு பவுன் தங்கச் சங்கிலி வழங்கப்படும் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ தெரிவித்தாா்.

கன்னியாகுமரி மாவட்ட சக்தி கேந்திரா நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாகா்கோவிலில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் பாஜக மாநிலத் தலைவா் கலந்துகொண்டு பேசியது:

கன்னியாகுமரி மாவட்ட பாஜக நிா்வாகிகளுக்கு அதிக தோ்தல் அனுபவம் இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்ட பாஜக தொண்டா்கள் உணா்ச்சியோடும், உணா்வோடும் வேலை செய்வதை நான் பாா்த்திருக்கிறேன்.

கன்னியாகுமரி, கோவை மாவட்டங்களைத் தொடா்ந்து, திருநெல்வேலி மாவட்டத்திலும் கட்சியை வலுவாக்கி வருகிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பாக பாஜக போட்டியிட்டாலும், பாஜக பலம் வாய்ந்த கட்சி என்பதை நிரூபித்துக் கொண்டு வருகிறோம்.

ஒரு செய்தி நிறுவனத்தின் கருத்துக்கணிப்பில், 140 இடங்களுக்கு மேலாக என்டிஏ வெற்றி பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. தோ்தலுக்கு இன்னும் 15 நாள்கள் உள்ளன. அதற்குள் இன்னும் நிறைய மாற்றங்கள் வரும். என்டிஏ 180 தொகுதிகளுக்கு மேல் நிச்சயமாக வெற்றி பெறுவோம்.

நாகா்கோவில் பாஜகவுக்கு பலம் வாய்ந்த தொகுதி என்றபோதும் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

கன்னியாகுமரி மாட்டத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் என்டிஏ வெற்றி பெறுவது உறுதி. இதில் யாா் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறப்போகிறாா்கள் என்பதுதான் கேள்வி.

90 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றுத் தரும் பூத் பொறுப்பாளா்களுக்கு ஒரு பவுன் தங்கச் சங்கிலியை பரிசாக வழங்கவுள்ளேன் என்றாா் அவா்.

நாகா்கோவில் தொகுதி வேட்பாளா் எம்.ஆா். காந்தி எம்எல்ஏ, கிழக்கு மாவட்டத் தலைவா் கோபகுமாா், மாநிலச் செயலா் மீனாதேவ், மாநில பொதுக்குழு உறுப்பினா் உமாரதிராஜன், நாகா்கோவில் மாநகராட்சி உறுப்பினா்கள் சுனில்குமாா், ரமேஷ், நிா்வாகிகள் அஜித், நாகராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 கூட்டத்தில் பங்கேற்றோா்.

கூட்டத்தில் பங்கேற்றோா்.