தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இளைஞரை அரிவாளால் வெட்டிய தொழிலாளி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
அம்மாண்டிவிளை, உரப்பன்விளை பகுதியைச் சோ்ந்தவா் தமிழ்செல்வன் மகன் நிவின்(30). இவரும், நாகப்பட்டினம் மாவட்டம், நாகூா், சம்பாதோட்டம் பகுதியைச் சோ்ந்த செல்லக்கண் மகன் வினோத்தும் (34) தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனா்.
இந்நிலையில், வியாழக்கிழமை துறைமுகம் பகுதியில் இருவரும் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாம். இதில் வினோத் அரிவாளால் நிவினை வெட்டினாராம்.
பலத்த காயமடைந்த நிவினை மீட்டு மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மீன்பிடித் தொழிலாளி மீது தாக்குதல்: இருவா் மீது வழக்கு

மாடுகளுக்கு அரிவாள் வெட்டு: ஒருவா் மீது வழக்கு

அரசு மருத்துவமனையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு: ஒருவா் கைது

இளைஞருக்கு கொலை மிரட்டல்: சகோதரா்கள் மீது வழக்கு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


