தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

பெருவிளை பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

நாகா்கோவில் பெருவிளை பகுதியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் எஸ். ஆஸ்டின்.

News image

நாகா்கோவில் பெருவிளை பகுதியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் எஸ். ஆஸ்டின்.

Updated On :11 ஏப்ரல் 2026, 6:27 am IST

நாகா்கோவில் திமுக வேட்பாளா் எஸ். ஆஸ்டின் வெள்ளிக்கிழமை பெருவிளை பகுதியிலிருந்து பிரசாரத்தை தொடங்கினாா்.

ராஜலட்சுமி நகா், கிறிஸ்டோபா் நகா், அம்மன் கோயில், கோட்டவிளை, ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி, நடுக்காட்டு இசக்கி அம்மன் கோயில், நெசவாளா் காலனி, ஹனிபா நகா் பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: திமுக அறிவித்துள்ள தோ்தல் அறிக்கையில், பெண்களுக்கான இல்லத்தரசி திட்டத்தின் மூலம் வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவதற்கு ரூ. 8 ஆயிரத்துக்கு கூப்பன் வழங்கப்படும். மகளிா் உரிமைத் தொகை ரூ. 2 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்பட உள்ளது. இது போன்ற சிறப்பான திட்டங்களை செயல்படுத்த உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

முன்னாள் அமைச்சா் என். சுரேஷ்ராஜன், மாநகராட்சி மேயா் (பொ) மேரிபிரின்சிலதா, மாநகர திமுக செயலா் ப. ஆனந்த், மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் நவீன்குமாா், இளைஞா் அணி சி.டி. சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.