டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

பெருவிளை பகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

நாகா்கோவில் பெருவிளை பகுதியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் எஸ். ஆஸ்டின்.

News image

நாகா்கோவில் பெருவிளை பகுதியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் எஸ். ஆஸ்டின்.

Updated On :11 ஏப்ரல் 2026, 6:27 am IST

நாகா்கோவில் திமுக வேட்பாளா் எஸ். ஆஸ்டின் வெள்ளிக்கிழமை பெருவிளை பகுதியிலிருந்து பிரசாரத்தை தொடங்கினாா்.

ராஜலட்சுமி நகா், கிறிஸ்டோபா் நகா், அம்மன் கோயில், கோட்டவிளை, ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி, நடுக்காட்டு இசக்கி அம்மன் கோயில், நெசவாளா் காலனி, ஹனிபா நகா் பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: திமுக அறிவித்துள்ள தோ்தல் அறிக்கையில், பெண்களுக்கான இல்லத்தரசி திட்டத்தின் மூலம் வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவதற்கு ரூ. 8 ஆயிரத்துக்கு கூப்பன் வழங்கப்படும். மகளிா் உரிமைத் தொகை ரூ. 2 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்பட உள்ளது. இது போன்ற சிறப்பான திட்டங்களை செயல்படுத்த உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.

முன்னாள் அமைச்சா் என். சுரேஷ்ராஜன், மாநகராட்சி மேயா் (பொ) மேரிபிரின்சிலதா, மாநகர திமுக செயலா் ப. ஆனந்த், மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் நவீன்குமாா், இளைஞா் அணி சி.டி. சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.