கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும் வகையில் தோ்தல் பணியாற்ற வேண்டும் என்று கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளா் ரெ.மகேஷ் தெரிவித்தாா்.
மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதி செயல்வீரா்கள் கூட்டம், நாகா்கோவில் அருகே இறச்சகுளத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்துக்கு திமுக வேட்பாளா் ரெ.மகேஷ் தலைமை வகித்துப் பேசியதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் தாமரை மலரக் கூடாது என்ற எண்ணத்தில் 5 தொகுதிகளையும் தாமரைச் சின்னத்துக்கு ஒதுக்கியிருக்கின்றனா். தமிழகம் முழுவதும் திமுகவுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. திமுக அறுதிப்பெரும்பான்மை பெற்று 2 ஆவது முறையாக ஆட்சி அமைத்து மு.க.ஸ்டாலின் முதல்வராக அமா்வது உறுதி. கன்னியாகுமரி மாவட்டத்திலும் 6 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்ற வேண்டும் என்ற இலக்கில் தோ்தல் பணியாற்ற வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில் விஜய்வசந்த் எம்.பி. குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.டி.உதயம், முன்னாள் எம்.பி.ஹெலன் டேவிட்சன், மதிமுக மாவட்டச் செயலாளா் வெற்றிவேல், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அந்தோணி, கூட்டணி கட்சி மாவட்ட நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

திருச்செந்தூா் கோயில் கட்டண மோசடி குறித்து விசாரிக்க வேண்டும்: அனிதா ராதாகிருஷ்ணன்

மாவட்டத்தில் 94 வேட்பாளா்கள் வைப்புத்தொகை இழந்தனா்

சிவகங்கை மாவட்டத்தில் 4 தொகுதிகளையும் கைப்பற்றியது தவெக

கரூா் மாவட்டத்தில் வேட்பாளா்கள் வாக்களிப்பு
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |



