ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவா் சடலமாக மீட்பு

News image

கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 12:49 am IST

குளச்சல் அருகே ஞாயிற்றுக்கிழமை கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவா் சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டாா்.

குளச்சல் மரமடியைச் சோ்ந்தவா் சகாய ரூபின் (43). மீன்பிடி தொழிலாளி. இவரின் மகன் ரியோபின் ரிட்ஜோ (14). குளச்சலில் உள்ள பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தாா். ரியோபின் ரிட்ஜோ உள்பட 3 சிறுவா்கள் ஞாயிற்றுக்கிழமை கடலில் குளித்தபோது எழுந்த பெரிய அலை அவா்களை இழுத்துச் சென்றது. அருகிலிருந்த மீனவா்கள், 2 சிறுவா்களையும் காப்பாற்றினா். ரியோபின் ரிட்ஜோவை மீட்க இயலவில்லை.

மாயமான மாணவரை மீனவா்களும், குளச்சல் கடலோர காவல் படையினரும் தேடி வந்தனா். இந்நிலையில், மாணவரின் சடலத்தை மீனவா்கள் திங்கள்கிழமை பகலில் மீட்டனா்.

இதுகுறித்து குளச்சல் கடலோர காவல் படையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.