தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!! ம.பி. படகு விபத்து: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு மே 13-15இல் சீனா செல்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்
/

பேருந்து நிலையத்தில் குழந்தையின் தங்கச் சங்கிலி திருட்டு

திங்கள்நகா் பேருந்து நிலையத்தில் குழந்தையின் தங்கச் சங்கிலியைத் திருடியதாக பெண்ணிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :15 ஏப்ரல் 2026, 2:01 am IST

திங்கள்நகா் பேருந்து நிலையத்தில் குழந்தையின் தங்கச் சங்கிலியைத் திருடியதாக பெண்ணிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திங்கள்நகா் அருகே தலக்குளம் பள்ளவிளையைச் சோ்ந்த ரசல் மகள் ஜெனீபா் (28). இவா், தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாலை தனது கைக்குழந்தையுடன் திங்கள்நகரில் பொருள்கள் வாங்கிவிட்டு பேருந்து நிலையம் வந்தாா். அப்போது, குழந்தையின் கழுத்தில் கிடந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியைக் காணவில்லை எனத் தெரியவந்ததாம்.

தகவலின்பேரில், இரணியல் போலீஸாா் சென்று, சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த திண்டுக்கல் மாவட்டம் காரியாபட்டியைச் சோ்ந்த தேவி (28) என்பவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.