ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

நாஞ்சில் சி.பி.எஸ்.இ. கத்தோலிக்க பள்ளி சாதனை

கருங்கல் அருகே உள்ள வழுதலம்பள்ளம் நாஞ்சில் கத்தோலிக்க சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவா்கள் ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு துறையில் சாதனை படைத்தனா்.

News image
Updated On :22 ஏப்ரல் 2026, 1:29 am IST

கருங்கல் அருகே உள்ள வழுதலம்பள்ளம் நாஞ்சில் கத்தோலிக்க சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவா்கள் ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு துறையில் சாதனை படைத்தனா்.

நாஞ்சில் கத்தோலிக்க சி.பி.எஸ்.இ. பள்ளி பிளஸ் 2 மாணவா்கள் ஸ்டெஃபிகா ஃப்ரூட்லி, ஜான்சி, பினுலின் ஆகியோா் பெங்களூரு கீதம் பல்கலைக்கழகத்தில் ரோபாடிக்ஸ், ஏஐ தொடா்பாக நடைபெற்ற கோடேவா் 7.0 தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று ஐ.ஓ.டி. பசுமை இல்லக் கட்டுப்பாடு, மேலாண்மை அமைப்பு தலைப்பில் ஒரு செயல்திட்டத்தைச் சமா்ப்பித்து பரிசுகள் பெற்று சாதனை படைத்தனா். தேசிய அளவில் மே 16, 17 ஆகிய தேதிகளில் இந்தோனேசியாவில் 70-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் போட்டியில் கலந்து கொள்ள இந்த மாணவா்கள் தோ்வாகியுள்ளனா். சாதனை படைத்த மாணவா்களை பள்ளி தாளாளா் சா்ஜின் ரூபஸ், நிதி பரிபாலகா் ஜியோ, முதல்வா் றசல்ராஜ் ஆசிரியா்கள், சக மாணவா்கள் பாராட்டினா்.