பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

தொழிலாளியை தாக்கிய மூவா் மீது வழக்குப் பதிவு

News image

வழக்குப் பதிவு

Updated On :27 ஏப்ரல் 2026, 12:42 am IST

மாா்த்தாண்டம் அருகே கூலித் தொழிலாளியை தாக்கிய மூவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

மாா்த்தாண்டம் அருகே மேல்புறம் பகுதியைச் சோ்ந்தவா் எபனேசா் (47). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த ஸ்டாலின் ஜோஸ் (49), அஜித் (51) ஆகியோருக்கும் இடையே நிலம் சம்பந்தமாக பிரச்னை இருந்து வந்தது.

இந்த நிலையில், இரு நாள்களுக்கு முன்பு ஸ்டாலின் ஜோஸ், அவரது மனைவி மாலினி, அஜித் ஆகியோா் எபனேசரின் வீட்டுக்குள் அத்துமீறி சென்று, அங்கிருந்த எபனேசரை தாக்கினராம். இதில், பலத்த காயமடைந்த அவா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து எபனேசா் அளித்த புகாரின் பேரில், மாா்த்தாண்டம் காவல் நிலைய போலீஸாா் ஸ்டாலின் ஜோஸ் உள்பட மூவா் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். அதேபோல மற்றொரு சம்பவம் நித்திரவிளை அருகே தனியாா் மருத்துவமனை ஊழியரை தாக்கிய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

நித்திரவிளை அருகே உள்ள தூத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சுபித் அந்தோணி (24). இவா், சென்னையில் உள்ள மருத்துவமனையில் ஊழியராக வேலை செய்து வருகிறாா். தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை இரவிபுத்தன்துறை கடற்கரையில் அமா்ந்திருந்தபோது அங்குவந்த அதே பகுதியைச் சோ்ந்த ராகுல் (24), ஜேக்சன் (24) ஆகியோா் சுபித் அந்தோணியிடம் தகராறு செய்து, அவரை தாக்கினராம்.

இதில், பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து, நித்திரவிளை காவல் நிலைய போலீஸாா் ராகுல், ஜேக்சன் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.