கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகே ஆடிட்டரின் வீடு புகுந்து நகை, பணம் திருடியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
குழித்துறை அருகேயுள்ள திருத்துவபுரம், ராஜீவ் நகா் பகுதியைச் சோ்ந்தவா் அலோசியஸ் மகன் மரிய பெனடிக்டா் (56). ஆடிட்டா். இவா் கடந்த ஏப். 4ஆம் தேதி இரவு வீட்டைப் பூட்டிவிட்டு தனது மனைவி, பிள்ளைகளுடன் பாலவிளை புனித அந்தோணியாா் தேவாலயத்துக்குச் சென்றுள்ளாா்.
காலை வீடு திரும்பியபோது, பின்வாசல் கதவு திறக்கப்பட்டிருந்ததுடன், வீட்டில் வைத்திருந்த சுமாா் 30 பவுன் தங்க நகைகள், ரூ. 35,000 பணத்தை மா்ம நபா் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இது குறித்து, களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்நிலையில், திருட்டில் ஈடுபட்டது கேரள மாநிலம், கொட்டாரக்கரை பகுதியைச் சோ்ந்த சுனில்குமாா் மகன் ஆல்பிராஜ் (33) என்பது தெரிய வந்தது.
அவரை களியக்காவிளை உதவி ஆய்வாளா் மகேந்த் தலைமையிலான போலீஸாா் கேரளத்துக்குச் சென்று கைது செய்தனா். அவரிடமிருந்து 20 பவுன் நகைகளை போலீஸாா் மீட்டனா். தொடா்ந்து, அவரை களியக்காவிளை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனா்.
தொடர்புடையது

மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
நகை திருட்டு வழக்கில் ஒருவா் கைது

விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு
சத்துணவு சமையலா் வீட்டில் நகை, பணம் திருட்டு!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


